விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சிஎஸ்கே அனைத்து வீரர்களையும் சமமாக நடத்தும்: ருதுராஜ் பேட்டி

அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் சிஎஸ்கே நிர்வாகம் சமமாக நடத்துமென ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். 

News image
Updated On :7 மே 2023, 12:15 pm IST

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான தொடக்கம் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்தாண்டு அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 384 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.

போட்டி முடிந்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: 

அணியில்  உள்ள அனைத்து வீரர்களையும் சிஎஸ்கே நிர்வாகம் சமமாக நடத்தும். அவர்கள் பிளேயிங் லெவனில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும். போட்டி நடந்துக் கொண்டு இருக்கும்போது இந்த தருணத்தில் நீயாக இருந்தால் என்ன் செய்வாய் எனக் கேட்பார்கள். இது அணியில் மிகப் பெரிய பாசிடிவிட்டியாகவும் வலுவான அணியாகவும் செயல்பட உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.