டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மயங்க் யாதவை விளையாட வைப்பது சிறந்த முடிவாக இருக்காது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ், நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் லக்னௌ அணிக்காக சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மயங்க் யாதவை சீக்கிரமாக விளையாட வைப்பது சிறந்த முடிவாக இருக்காது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன் (கோப்புப்படம்) - படம் | ஐபிஎல்
இது தொடர்பாக அவர் ஜியோ சினிமாவில் பேசியதாவது: மயங்க் யாதவின் பந்துவீச்சு குறித்த பேச்சுகளை அதிகம் காண முடிகிறது. அவரது வேகப் பந்துவீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரைப் போன்ற ஒரு வீரர் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கிடைக்க அந்த அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். மிகப் பெரிய போட்டிகளில் அனுபவமிக்க பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மயங்க் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார்.
அவர் டெஸ்ட் போட்டிக்குத் தயாராக உள்ளாரா? அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை பார்ப்பது சிறப்பானது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளைக்கு 15-20 ஓவர்கள் வீச வேண்டும். வேகப் பந்துவீச்சாளராக இருப்பதனால், அவரது உடல் எந்த அளவுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. அதனால், மயங்க் யாதவை சீக்கிரமாக டெஸ்ட் போட்டிகளுக்கு கொண்டுவரத் தேவையில்லை என நினைக்கிறேன்.
மயங்க் யாதவ் அளவுக்கு பந்துவீச்சாளர்கள் பலரும் வேகமாக பந்துவீசுவதில்லை. அதனால், இந்திய அணி அவரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்திக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். அவரை டெஸ்ட் போட்டிகளில் தற்போது அறிமுகம் செய்வது சிறந்த முடிவாக இருக்காது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புவனேஸ்வர் குமாரின் சாதனையை சமன் செய்த மயங்க் யாதவ்!

ஆர்ஜென்டீனா அணியிலிருந்து விடைபெறுகிறாரா மெஸ்ஸி?

லாலு பிரசாத் யாதவ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

சிறப்பான பயணத்தை தொடங்கியுள்ளீர்கள்; சூர்யவன்ஷிக்கு சூர்யகுமார் யாதவ் வாழ்த்து!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET




