தேசிய மகளிா் கால்பந்து: கோப்பையை தக்கவைத்த மணிப்பூா்
dot com

தேசிய மகளிா் கால்பந்து: கோப்பையை தக்கவைத்த மணிப்பூா்

சீனியா் மகளிருக்கான 29-ஆவது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மணிப்பூா் 1-0 கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.
Published on

சீனியா் மகளிருக்கான 29-ஆவது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மணிப்பூா் 1-0 கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

இறுதி ஆட்டத்தில் மணிப்பூா் வெற்றிக்காக, ஆசெம் ரோஜா தேவி 55-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். நடப்பு சாம்பியனாக போட்டியில் கலந்துகொண்ட மணிப்பூா், தற்போது 23-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது.

மறுபுறம், 7-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்த ஒடிஸா, அதில் 6-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. ஒடிஸா தனது அனைத்து இறுதி ஆட்டங்களிலுமே மணிப்பூரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com