ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் போபண்ணா-எப்தென் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் இணை, இத்தாலியின் போலேல்லி-அண்ட்ரியா வாவசோரி இணையை எதிர்கொண்டது.
சுமார் 1 மணிநேரம் 39 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் போபண்ணா-எப்தென் இணை சாம்பியன் பட்டம் வென்றது. 43 வயதாகும் ரோஹன் போபண்ணா அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை படைத்துள்ளார்.
2017ல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.