ஓராண்டில் 10-15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும் என அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பல்பிர்னி தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டிகளில் அயர்லாந்து பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
இந்த வெற்றிக்குப் பிறகு அயர்லாந்து அணியின் கேப்டன் பேசியதாவது: டாஸை இழந்தபோதிலும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட் எடுப்பது பெரிய சாதனை. களத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும்போது பதற்றமாக இருந்தது. நிலைத்து ஆடினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. பலருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அயர்லாந்து வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக மாறுவதற்கு இந்த வெற்றி கண்டிப்பாக ஊக்கமளிக்கும். முதல் டெஸ்ட் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. உலக அளவில் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. நாங்கள் ஓராண்டில் 10-15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அப்படி விளையாடும் இடத்துக்கு வளரும்போது எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பல்பிர்னி 58* ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் வருங்காலத்திற்காக... ஷுப்மன் கில் மாணவர்களுக்கு ஆதரவு!

இந்திய அணி தொடர்ச்சியாக டி20 தொடர்களை இழக்க இதுதான் காரணம்: ஷ்ரேயாஸ் ஐயர்

முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து!

அயர்லாந்து கேப்டன் அரைசதம்; இந்தியாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke





