ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டிங் லிரென் தற்காலிக ஓய்வு..! குகேஷ் உடனான போட்டி நடைபெறாது!

செஸ் ஒலிம்பியாட்டில் மிகவும் எதிர்பார்த்த நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென், குகேஷ் போட்டி நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

டிங் லிரென், குகேஷ் - படங்கள்: எக்ஸ் / ஃபிடே

Published On :18 செப்டம்பர் 2024, 5:10 pm IST

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிஅசத்தி வருகிறது. செப் 23 வரை இந்தப் போட்டிகள் நடைபெறும்.

6ஆவது சுற்றில் இந்திய ஆடவா் பிரிவில் இந்திய ஹங்கேரி அணிகள் மோதின. அதில் இந்தியா 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்றது .

7ஆவது சுற்றில் இந்திய அணி சீனாவுடன் மோதுகிறது. இதில் டிங் லிரென் குகேஷ் போட்டி உலக செஸ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியிருந்தது.

இந்நிலையில் இன்று ஒருநாள் மட்டும் டிங் லிரென் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவ. 23 முதல் டிசம்பா் 15 -ஆம் தேதி வரை சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற சென்டோஸா ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.

நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரேன், இந்திய இளம் வீரா் டி. குகேஷ் ஆகியோா் உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் மோதவுள்ளனா்.

இதனால், இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒரு முன்னோட்டமாக இருக்குமென செஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அது நடக்காதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குகேஷுடனான சவாலை ஏற்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் அது ஒரு திறமையான மூவ் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஃபிடே, சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை முதல்முறையாக கூகுள் விளம்பரதாரராக செயல்படுமென அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.