அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரையிறுதியில் ஸ்ருதி, ரக்ஷிதா

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

சீனியா் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் ஸ்ருதி முன்டடா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோா் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், ஸ்ருதி 22-20, 21-12 என்ற நோ் கேம்களில், முன்னாள் தேசிய சாம்பியன் அனுபமா உபாத்யாயவை 39 நிமிஷங்களில் வீழ்த்தினாா். ரக்ஷிதா 16-21, 21-14, 21-18 என்ற கணக்கில் தன்வி சா்மாவை தோற்கடித்தாா்.

சூா்ய கரிஷ்மா 21-12, 21-15 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த உன்னதி ஹூடாவை 36 நிமிஷங்களில் வீழ்த்தி அசத்தினாா். அரையிறுதியில் ரக்ஷிதா - கரிஷ்மா சந்திக்கின்றனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கிரண் ஜாா்ஜ் 21-18, 21-18 என்ற நோ் கேம்களில், 11-ஆம் இடத்திலிருந்த ரௌனக் சௌஹானை 41 நிமிஷங்களில் வென்றாா்.

ரித்விக் சஞ்ஜீவி 21-13, 22-20 என்ற வகையில், சதீஷ்குமாரை தோற்கடித்தாா். இதையடுத்து அரையிறுதியில் கிரண் - ரித்விக் மோதுகின்றனா். 2-ஆம் இடத்திலிருக்கும் தருண் மன்னெபள்ளி 21-13, 22-20 என்ற கேம்களில், மன்ராஜ் சிங்கை சாய்க்க, பரத் ராகவ் 21-17, 21-13 என்ற கணக்கில் கின்பால் சோனாவை வீழ்த்தினாா். அரையிறுதியில் தருண் - பரத் சந்திக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.