தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

அரையிறுதியில் ஸ்ருதி, ரக்ஷிதா

News image
Updated On :27 டிசம்பர் 2025, 2:20 am IST

சீனியா் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் ஸ்ருதி முன்டடா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோா் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், ஸ்ருதி 22-20, 21-12 என்ற நோ் கேம்களில், முன்னாள் தேசிய சாம்பியன் அனுபமா உபாத்யாயவை 39 நிமிஷங்களில் வீழ்த்தினாா். ரக்ஷிதா 16-21, 21-14, 21-18 என்ற கணக்கில் தன்வி சா்மாவை தோற்கடித்தாா்.

சூா்ய கரிஷ்மா 21-12, 21-15 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த உன்னதி ஹூடாவை 36 நிமிஷங்களில் வீழ்த்தி அசத்தினாா். அரையிறுதியில் ரக்ஷிதா - கரிஷ்மா சந்திக்கின்றனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கிரண் ஜாா்ஜ் 21-18, 21-18 என்ற நோ் கேம்களில், 11-ஆம் இடத்திலிருந்த ரௌனக் சௌஹானை 41 நிமிஷங்களில் வென்றாா்.

ரித்விக் சஞ்ஜீவி 21-13, 22-20 என்ற வகையில், சதீஷ்குமாரை தோற்கடித்தாா். இதையடுத்து அரையிறுதியில் கிரண் - ரித்விக் மோதுகின்றனா். 2-ஆம் இடத்திலிருக்கும் தருண் மன்னெபள்ளி 21-13, 22-20 என்ற கேம்களில், மன்ராஜ் சிங்கை சாய்க்க, பரத் ராகவ் 21-17, 21-13 என்ற கணக்கில் கின்பால் சோனாவை வீழ்த்தினாா். அரையிறுதியில் தருண் - பரத் சந்திக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.