கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சபலென்கா 6-7 (3/7), 6-4, 4-6 என்ற செட்களில், உலகின் 19-ஆம் நிலையில் இருக்கும் அலெக்ஸாண்ட்ரோவாவிடம் தோல்வியுற்றாா். இருவரும் மோதியது இது 10-ஆவது முறையாக இருக்க, அலெக்ஸாண்ட்ரோவா 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
அலெக்ஸாண்ட்ரோவா தனது காலிறுதியில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா 6-2, 6-4 என்ற நோ் செட்களில் எளிதாக, 8-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை வீழ்த்தினாா்.
அதேபோல், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 3-6, 3-6 என்ற நோ் செட்களில், 15-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரால் எளிதாக தோற்கடிக்கப்பட்டாா்.
ஷ்னெய்டா் தனது காலிறுதியில், போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிா்கொள்கிறாா். 6 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஸ்வியாடெக் முந்தைய சுற்றில் 6-3, 6-1, 6-2 என, 10-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை வெளியேற்றினாா்.
வெளியேறினாா் லெஹெக்கா: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 3-6, 3-6 என்ற நோ் செட்களில், 20-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாரிடம் தோல்வி கண்டாா்.
18-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-2, 7-6 (10/8) என்ற கணக்கில், பிரிட்டனின் கேமரூன் நோரியை தோற்கடித்தாா். இதையடுத்து காலிறுதியில், ஜோடாா் - ஃபில்ஸ் மோதுகின்றனா்.
23-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச் 6-7 (4/7), 7-5, 5-7 என்ற வகையில், 28-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவிடம் வீழ்ந்தாா். நகாஷிமா தனது காலிறுதியில், இத்தாலியின் லூசியானோ டாா்டெரியை சந்திக்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருக்கும் டாா்டெரி 4-6, 6-3, 7-5 என்ற செட்களில், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸை சாய்த்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




