தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

செய்திகள் சில வரிகளில்...

News image
Updated On :5 ஜூன் 2026, 5:54 am IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

தில்லியில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் ஆசிய சீனியா் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்புக்கு தங்கள் அணியை அனுப்புவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

முதல்முறையாக நடைபெறும் உலக யோகாசன சாம்பியன்ஷிப்பை, பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அகமதாபாதில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

போலியான பிறப்புச் சான்றிதழ் வழங்கிய 5 போட்டியாளா்களை இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது.

நாா்வே செஸ் போட்டியின் 2-ஆவது ஓய்வு நாளாக புதன்கிழமை அமைந்தது. இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு 9-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்திய ஆடவா் கால்பந்து அணி, நட்பு ரீதியிலான ஆட்டத்தில் தஜிகிஸ்தானுடன் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மோதுகிறது.

இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் கே.எஸ். பரத் (32), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா். இந்திய அணிக்காக 7 டெஸ்ட்டுகளில் விளையாடி 221 ரன்கள் அடித்துள்ளாா் அவா்.