மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாண்டியாவின் பேட்டிங்கும் பந்துவீச்சும்: என்ன சொல்கிறார் விராட் கோலி?

இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்களை இன்று நான் சொல்லப்போவதில்லை.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 10:39 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆல்ரவுண்டர் பாண்டியா நிச்சயம் பந்துவீசுவார் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதவுள்ளன. இந்த ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகளில் (50 ஓவர், டி20) இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 12 முறை மோதியதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் பற்றி இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

பாகிஸ்தான் மிகவும் வலுவான அணி. நீண்ட நாளாகவே அவர்கள் வலுவான அணியாக உள்ளார்கள். அவர்களுக்கு எதிராகச் சிறப்பாக விளையாட வேண்டும். ஆட்டத்தின் போக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றக் கூடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளார்கள். இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்களை இன்று நான் சொல்லப்போவதில்லை. அனைத்து விதமான சூழலையும் எதிர்கொள்ளும் வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் எங்கள் வீரர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட தயாராக உள்ளார்கள். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஏதாவது ஒரு தருணத்தில் 2 ஓவர்களையாவது வீசும் அளவுக்கு உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார் ஹார்திக் பாண்டியா. அவர் பந்துவீசும் வரை இதர வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வோம். மற்றவர்கள் ஒரு ஓவர், இரண்டு ஓவர்கள் வீசக்கூடிய சில திட்டங்களை வகுத்துள்ளோம். 6-ம் நிலை வீரராக பாண்டியாவிடம் உள்ள திறமையை ஒரே இரவில் கொண்டுவர முடியாது. அதனால் தான் ஒரு பேட்டராக அவர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். சிறப்பாக விளையாடும்போது எதிரணியைத் திணறடித்து விடுவார். 6-ம் நிலை பேட்டராக அணிக்கு அவர் அளிக்கும் பங்களிப்பை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உலக கிரிக்கெட்டில் 6-ம் நிலை பேட்டராக அதற்கென தகுதி பெற்றவர்களே களமிறங்குகிறார்கள். பாண்டியாவால் தற்போது முடியாத ஒன்றை நாங்கள் வற்புறுத்த மட்டோம். சில ஓவர்கள் வீச அவர் ஆர்வமாக உள்ளார். அப்படி அவர் செய்யும்போது அணி இன்னும் சிறப்பாக விளையாடும். உலகக் கோப்பைப் போட்டிக்குச் செல்லும் முன்பு நம்பிக்கையுடன் உள்ளோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.