சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

அமெரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்வி; பாபர் அசாம் கூறியது என்ன?

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.

News image

பாபர் அசாம் (கோப்புப்படம்)

Updated On :7 ஜூன் 2024, 5:51 pm IST

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி லேசாக எடுத்துக் கொண்டதாகவும், திட்டங்களை சரிவர செயல்படுத்தத் தவறியதாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எந்த ஒரு தொடரில் விளையாடினாலும், அதற்கேற்றவாறு சிறப்பாக அணிகள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த நாடுகளுக்கு (அசோஸியேட் நாடுகள்) எதிரான போட்டிகளில் விளையாடும்போது, சாதரணமாக விளையாடலாம் என்ற மனநிலை இருக்கிறது.

எந்த ஒரு அணிக்கு எதிராக விளையாடினாலும், திட்டங்களை சரியாக செயல்பட்டுத்தாவிட்டால், அந்த அணி உங்களை தோற்கடித்து விடும். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. போட்டிக்கு நன்றாக தயாரானோம். ஆனால், போட்டியின்போது எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. நான் ஏமாற்றத்துடன் இருக்கிறேன். பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலுமே நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றார்.

நாளை மறுநாள் (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.