தவறு செய்துவிட்டேன்; அரையிறுதி தோல்விக்குப் பிறகு பேசிய ஜோஸ் பட்லர்!

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.
ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஜோஸ் பட்லர்
இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி? திட்டத்தைப் பகிர்ந்த அக்‌ஷர் படேல்!

இந்த நிலையில், மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இருந்தபோதிலும் மொயின் அலிக்கு பந்துவீச வாய்ப்பளிக்காமல் தவறு செய்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கோப்புப் படம்
கோப்புப் படம்படம் | AP

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாதது ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானவர்களே. 140 அல்லது 150 ரன்களுக்குள் இந்திய அணியை கட்டுப்படுத்திவிடலாம் என நினைத்தோம். ஆனால், அவர்கள் அதிக ரன்கள் குவித்துவிட்டனர்.

ஜோஸ் பட்லர்
அரையிறுதி வெற்றி: ஆனந்தக் கண்ணீரில் ரோஹித் சர்மா; தேற்றிய விராட் கோலி!

திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. பவர் பிளேவில் எங்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கிறேன். பந்துவீச்சில் மொயின் அலியை பயன்படுத்தவில்லை. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக இருந்ததால், அவரைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அவரைப் பந்துவீச்சில் பயன்படுத்தாமல் தவறு செய்துவிட்டேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com