/

புராதனக் கோயில் புனரமைக்கப்படுமா?

செஞ்சி, செப். 23: செஞ்சியில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தளவானூர் கிராமத்தில் 600 ஆண்டுகால பழம்பெரும் சிவன் ஆலயம் சிதிலம் அடைந்து வருகிறது.  ÷இக்கோயிலை அரசு புனரமைக்க வேண்டும் என

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:34 am

ஜெ.பாபு

செஞ்சி, செப். 23: செஞ்சியில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தளவானூர் கிராமத்தில் 600 ஆண்டுகால பழம்பெரும் சிவன் ஆலயம் சிதிலம் அடைந்து வருகிறது.

 ÷இக்கோயிலை அரசு புனரமைக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ÷செஞ்சியைச் சுற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் பல சிதைந்து சீரழிந்து போயின. சிலவற்றை காப்பாற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

 ÷இதே போல் செஞ்சி வட்டம், தளவானூர் கிராமத்தில் பராமரிப்பு இல்லாமல் போன சிவன் கோயில் மீது மரம், செடி, கொடி முளைத்து கோயிலை மறைத்து வானுயரம் வளர்ந்துள்ளது.

 ÷செடி, கொடிகளை அகற்றி கோயிலை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. ஒரு வரலாற்றுச் சின்னம் இங்கே அழிந்துக் கொண்டிருக்கிறது.

 ÷நம் முன்னோர் போற்றி வணங்கிய கோயில் இங்கே இடிந்து விழும் நிலையில் உள்ளது. சிவன் ஆலயத்தின் வரலாறு தெரியவில்லை. கோயிலின் சிற்ப வேலைப்பாடுகளை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.

 ÷பிரதோஷ தினத்தில் மட்டும் பூஜைகள் நடைபெறுகிறதாம். பைரவர், தட்சிணாமூர்த்தி சிலைகள் உள்ளன. மேலும் இக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தால் இதன் வரலாறு தெரியும்.

 ÷இதே தளவானூரில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஏற்படுத்திய குடவறை சிவன் கோயிலும் உள்ளது. இக் கோயில் தொல்லியல் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

 ÷தளவானூர் சிவன் ஆலயத்தை புதுப்பித்து பொதுமக்கள் வழிபாடு செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும். வரலாற்றுப் பொக்கிஷத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.