இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என்று வனத்துறையினர் உள்ளிட்ட கூட்டு பாதுகாப்புக்

News image
Updated On :9 ஜனவரி 2015, 12:46 pm

கோ.ஜெயக்குமார்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என்று வனத்துறையினர் உள்ளிட்ட கூட்டு பாதுகாப்புக் குழுவினர் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பிளவக்கல் அணைப் பகுதியில் 5 நபர்கள் ஹெல்மட் அணிந்து கொண்டு கிறிஸ்துமஸ் நேரத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவசமாக குடங்கள் வழங்கினார்களாம். இது குறித்து தகவல் கிடைத்து வனத் துறையினர் செல்வதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். கிறிஸ்துமஸ்க்கு அன்பளிப்பு கொடுப்பவர்கள் ஹெல்மட் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும், இவர்கள் தீவிரவாதிகளாக இருப்பார்களா என்ற கோணத்திலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் விருதுநகர் வன பாதுகாப்புப் படையின் உதவி வனப் பாதுகாவலர் ஏ.பழனிராஜ், மதுரையில் உள்ள போதைத் தடுப்பு போலீஸார் மற்றும் வன பாதுகாப்பு அதிரடிப்படையினர் என தலா 20 பேர் கொண்ட இரு குழுக்கள் ராஜபாளையம் பகுதியில் உள்ள மலை வழியே சாப்டூர் மலைப் பகுதி வரை சுமார் 60 கி.மீ. நடந்தே புதன், வியாழன்கிழமைகளில் சோதனைகளை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தனர்.

சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் தென்படவில்லை என்று உதவி வனப் பாதுகாவலர் ஏ.பழனிராஜ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.