கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் மருது கணேஷ் வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

News image
Updated On :22 மார்ச் 2017, 9:26 am

தினமணி


சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி பிவீன் நாயரிடம், மருது கணேஷ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் திமுக முக்கியப் பிரமுகர்கள் சேகர் பாபு, மு.க. தமிழரசு ஆகியோர் இருந்தனர்.

மருது கணேஷ் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவருடன் அதிக அளவில் திமுக தொண்டர்கள் வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்.கே. நகரில் வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும், பன்னீர்செல்வம் தரப்பில் மதுசூதனனும், திமுக தரப்பில் மருது கணேஷும், பாஜக சார்பில் கங்கை அமரனும் போட்டியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.