ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்  

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்  
Published on
Updated on
1 min read

சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகங்களை அடுத்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது ஜெயலலிதாவோடு தொடர்புடைய பல்வேறு தரப்பினருக்கும் சம்மன்கள் அனுப்பி விசாரித்து வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் ட்ரிக்கா மற்றும் நிதிஷ் நாயக் ஆகிய மூவரும் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதேசமயம் அப்பல்லோ மருத்துவர்களான அருள் செல்வன் மற்றும் ரவி குமார் ஆகிய இருவரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், பாஸ்கர் மற்றும் செந்தில் வேலன் ஆகிய இருவரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதியும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி சுப்பையா ஆகஸ்ட் 24-ஆம் தேதியும் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்களை அனுப்பியுள்ளது  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com