இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆர்.கே. நகர் வெற்றி திருவாரூரிலும் பிரதிபலிக்கும்

சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் பெற்ற வெற்றி திருப்பரங்குன்றம்,  திருவாரூர் இடைத்தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தஞ்சாவூர்: சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் பெற்ற வெற்றி திருப்பரங்குன்றம்,  திருவாரூர் இடைத்தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
இதுதொடர்பாக அவர், தஞ்சையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியது:
ஆர்.கே.நகர் தேர்தலில் பெற்ற வெற்றி திருப்பரங்குன்றம்,  திருவாரூர் தேர்தலிலும் பிரதிபலிக்கும். குக்கர் சின்னம் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து தொழில்களும் நலிவடைந்துவிட்டன. மேலும், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பணக்காரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எனவே, இது தோல்வியடைந்த திட்டம்.
ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரும் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை என்ன ஆனது? தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாய சங்கத் தலைவர்களும் கூறுகின்றனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சி,  அதிகாரத்துக்கு வந்துவிட்டோம் என்பதற்காக, வானளாவிய அதிகாரம் இருப்பதாகக் கருதி, அதிகார துஷ்பிரயோகம் செய்து மனித உரிமை செயற்பாட்டாளர்களைக் கைது செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது நிச்சயம் முடிவுக்கு வரும் என்றார் தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.