
சென்னை: ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்பது குறித்து அறிக்கை தர வருமானவரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
வருமானவரித்துறை எதிர் மனு தாரராக உள்ள சொத்து வரி கணக்கு செலுத்துதல் தொடர்பான வழக்கு ஒன்று திங்களன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில்தான் வருமான வரித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்பது தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் . வாரிசு குறித்து ஜெயலலிதா உயில் எஎதுவும் எழுதியுள்ளாரா என்பது குறித்தும் வருமான வரித்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.