சார் -பதிவாளர் அலுவலகங்களில் அமலுக்கு வந்தது டோக்கன் நடைமுறை

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் டோக்கன் நடைமுறை திங்கள்கிழமை அமலுக்கு வந்தது.
Published on
Updated on
1 min read


தமிழகத்தில் உள்ள அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் டோக்கன் நடைமுறை திங்கள்கிழமை அமலுக்கு வந்தது.
சார்-பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்களைப் பதிவு செய்ய முதலில் வருவோருக்கு டோக்கன்கள் அளிக்கும் நடைமுறை 51 அலுவலகங்களில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து 575 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் இத்திட்டம் திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 10 டோக்கன்கள் வீதம் 30 டோக்கன்களும், 1 முதல் 1.30 மணி வரையில் 5 டோக்கன்களும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை 10 டோக்கன்களும், பிற்பகல் 3 முதல் 3.30 மணி வரை 5 டோக்கன்களும் கொடுக்கப்பட்டதாக பதிவுத் துறை அதிகாரிகள் கூறினர். 
அனைத்து அலுவலகங்களிலும் நாளொன்றுக்கு 50 டோக்கன்கள் வரை கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் புதிய திட்டம் தொடர்ந்து சீரிய முறையில் செயல்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com