புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு ஸ்டாலின் நேரில் நிதியுதவி
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நிதியுதவி வழங்கினார்.


அரியலூர்: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நிதியுதவி வழங்கினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் ஒருவரான, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தா.பழூர் கார்குடி கிராமத்தைச் சார்ந்த சிவச்சந்திரன் அவர்களின் இல்லத்துக்கு, இன்று (24-02-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, கழகத்தின் சார்பில் ரூ 2 இலட்சம் நிதியுதவியை சிவச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...