தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேர்தல் பிரசாரத்துக்கு வருவார், ஆனால் பேச மாட்டார்: ஒரு முக்கியக் கட்சித் தலைவர் குறித்து தகவல்

தேர்தல் பிரசாரங்களுக்குக் கட்சித் தலைவர் வருவார், ஆனால் பிரசாரத்தில் பேச மாட்டார் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2019, 5:31 am

DIN


சென்னை: தேர்தல் பிரசாரங்களுக்குக் கட்சித் தலைவர் வருவார், ஆனால் பிரசாரத்தில் பேச மாட்டார் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் தெரிவித்துள்ளார்.

இது எந்த கட்சித் தலைவரைப் பற்றி எந்த துணைப் பொதுச் செயலாளர் சொன்னது என்பது நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சொல்ல வேண்டியதில்லை என்று தான் நினைக்கிறேன்.

சரி நேராக விஷயத்துக்கு வருவோம், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தேமுதிக துணைப் பொதுச் செயலர் சுதீஷ் பேட்டி அளித்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, பாஜகவுடன் கூட்டணியில் இணைவதில் எந்த தடையும் ஏற்படவில்லை. நாங்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் விரும்பியத் தொகுதிகள் கிடைத்ததால் அதனை ஏற்றுக் கொண்டோம் என்று இழுபறி நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில்லாமல், பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் எங்களுக்கு அக்கட்சி சில வாக்குறுதிகளை அளித்து, மீண்டும் பாஜக  தலைமையிலான ஆட்சி அமைந்ததும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார். ஆனால் பேச மாட்டார்.

அவர் தொகுதி வாரியாக பிரசாரத்துக்கு வந்தாலே போதும். கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள் என்று கூறினார் சுதீஷ்.

நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, வேட்பாளர்கள் குறித்து விஜயகாந்துதான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது குறித்தும் அவரே இறுதி முடிவு எடுப்பார் என்றும் சுதீஷ் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.