இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சங்கரன்கோவிலை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம்!

சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. 

News image
Updated On :17 செப்டம்பர் 2019, 11:17 am

Muthumari

சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கென தனி அதிகாரி ஒருவரை நியமித்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

தென்காசி தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டது முதலே சங்கரன்கோவில் பகுதி மக்கள், தங்களது பகுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் அல்லது சங்கரன்கோவிலைத் தலைநகராகக் கொண்டு தென்காசி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு சிவகிரி, திருவேங்கடம் உள்ளிட்ட தாலுகாக்களைக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைகள், காய்கறிச் சந்தைகள் எதுவும் இயங்கவில்லை. சுமார் ஆயிரகணக்கான விசைத்தறிக்கூடங்கள் செயல்படவில்லை. 

மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக, சங்கர நாராயணர் கோவிலில் இருந்து தாசில்தார் அலுவலகம் வரை மாபெரும் பேரணியும் நடைபெற்றது.

சங்கரன்கோவில் தனி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.  முன்னதாக, சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலக்ஷ்மியிடம் இதுதொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.