இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருக்கொள்ளிக்காட்டில் சனிப் பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பிரவேசம் செய்வதை தொடர்ந்து சனிப்

News image
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்
Updated On :27 டிசம்பர் 2020, 2:45 am

DIN


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பிரவேசம் செய்வதை தொடர்ந்து சனிப் பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இங்குள்ள பொங்குசனீஸ்வரர் கையில் ஏர் கலப்பையுடன் அருள்பாலித்து வருவது தனிச்சிறப்பு மிக்கதாகவும்.

இவ்வாலயத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்டால் சனி தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம்.

நளச்சக்கரவர்த்தி திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரரை வழிபட்ட பின்னர் திருக்கொள்ளிக்காடு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்டபின்னர் தான் இழந்த நாடு நகரங்களை திரும்பக் கிடைக்கப் பெற்றார் என்பது ஐதீகம்.

சனிப் பெயர்ச்சியை ஒட்டி பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் காலை ஏழு மணிக்குப் பின்னர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்களுக்கு அர்ச்சனை போன்ற எவ்வித பரிகாரங்களும் செய்ய அனுமதிக்கப்படவில்லை .
சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே 19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு திருவாரூர் துணை ஆணையர் ஹரிஹரன் ஆலய தக்கார் ராஜா செயல் அலுவலர் சுரேந்தர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் தஞ்சை சரக காவல்துறை தலைவர் ராகேஷ் மீனா ஆகியோர் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்தி காவல் துணை கண்காணிப்பாளர் கள் பழனிச்சாமி தேன்மொழி வேல் ,ரபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருத்துறைப்பூண்டி திருவாரூர் மன்னார்குடி ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.