பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருத்துறைப்பூண்டி அருகே இடி தாக்கியதில் ஒருவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இடி தாக்கியதில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக்..

Published On :

திருத்துறைப்பூண்டி அருகே செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இடி தாக்கியதில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி அருகே வாளமாபுரம், மானாவாரி தெருவில் உள்ள செங்கல் சூளையில் புகழேந்தி (40) அவரது மனைவி பெரியநாயகி(35) உறவினர் அரவிந்த் (28 )ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனையடுத்து செங்கல் தயாரிக்க தயார் செய்த மண் கல் கரைந்துவிடாமல் இருக்கு கல் அடுக்கிவைக்கப்பட்ட கொட்டகை மீது ஏறி புகழேந்தி தார்பாய்  வைத்து மூடிக்கொண்டிருந்தபோது அவரது மனைவி பெரியநாயகி, உறவினர் அரவிந்த் ஆகியோர் அவருக்கு உதவி செய்துகொண்டிருந்தனர்.  

அப்போது புகழேந்தி மீது இடிதாக்கியதில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த பெரியநாயகி, அரவிந்த் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.