சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஜயங்கொண்டம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளம் பெண் பலி

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:48 pm

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செந்துறை அடுத்த சிறுகளத்தூர், மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி மனைவி சாந்தி(31). இவர், புதன்கிழமை பிற்பகல் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மாயவன் மனைவி பவுனம்மாளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, ஜயங்கொண்டம் சென்றார். அங்கு தனது தம்பி திருமணத்துக்கு நகைகளை வாங்கிக் கொண்டு இலையூர் வாரியங்காவல் சாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது எதிரே வந்த லாரி, அவர்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பலத்த காயமடைந்த பவுனம்மாள் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து ஜயங்கொண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ம.இளையராஜா(30) என்பவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.