இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மலேசியாவில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: வாழப்பாடி பகுதியில் பரபரப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்கு மலேசியாவில் இருந்து வந்தவர்கள் 10 பேரை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். 

News image
Updated On :25 மார்ச் 2020, 2:14 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்கு மலேசியாவில் இருந்து வந்தவர்கள் 10 பேரை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவர், மலேசியாவில் பணிபுரிந்து வந்தார். கடந்த 11-ம் தேதி மலேசியாவில் இருந்து தனது நண்பர்கள் 10 பேருடன் சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன் மீண்டும் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலைத்திருக்கு சென்றுள்ளனர். 

விமானம் ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்திற்கே திரும்பியுள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்திற்குச் சென்ற சுகாதாரத் துறையினர், மலேசியாவிலிருந்து வந்து இருக்கும் 10 பேரையும் வீட்டிற்குள் தனிமையில் வைத்து கண்காணித்து வருகின்றனர். 

வெளியில் வரக்கூடாது என எச்சரித்து வீட்டுக்கு முன்பாக அறிவிப்பு ஒட்டியுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்தவ 10 பேர், தனிமையில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.