இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவலர்கள் விசாரிப்பு: மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள் 

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினர்களை காவலர்கள் தடுத்து விசாரித்தால் கூட்டத்தை புறக்கணித்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.

News image
தருமபுரியில் கூட்டத்தை புறக்கணித்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள்.
Updated On :27 ஆகஸ்ட் 2021, 10:11 am

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினர்களை காவலர்கள் தடுத்து விசாரித்தால் கூட்டத்தை புறக்கணித்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.

தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கூட்டத்திற்கு பங்கேற்க மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கூட்டம் நடைபெறும் வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி நகர காவலர்கள் உறுப்பினர்களிடம் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர்.

காவலர்களின் இந்த நடவடிக்கை கண்டு அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் யசோதா மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் நடைபெற இருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க மொத்தமுள்ள 17 உறுப்பினர்கள் கூட்ட‌ வளாகத்துக்குள் வருகை தந்தோம். ஆனால் நாங்கள் யாரும் கேட்காமலேயே இந்த வளாகத்தில் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் காவலர்கள் எங்களை தடுத்து விசாரித்தனர். மொத்தமுள்ள‌ 17 உறுப்பினர்களும் அரசியல் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.

இதுவரை இந்த வளாகத்தில் நடைபெற்ற எந்த கூட்டத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு கோரியதில்லை. தற்போது எங்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரிக்கின்றனர். காவலர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறேம் என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சி செயலாளர் மாரிமுத்து ராஜ் கூறியது: மாவட்ட ஊராட்சிக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ பங்கேற்க கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காவலர்கள் விசாரித்திருக்கலாம்‌ மேலும் கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் கூட்டத்தை தவிர்க்க காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் தலைவரின் தலைமையில் நடைபெற உள்ளது. வேறெந்த நோக்கமும் இல்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.