இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது: முதல்வர் பழனிசாமி

தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று ராணிப்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

News image
ராணிப்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Updated On :9 பிப்ரவரி 2021, 11:42 am

DIN

தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று ராணிப்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

ராணிப்பேட்டையில் அவர் பேசும்போது, 

திமுக ஆட்சியில் மின்தடை ஏற்பட்டதால் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வெவ்வேறு மாநிலத்திற்குச் சென்றது. அதிமுக அரசு பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மின் தடை இல்லாத மாநிலமாக உருவான. 25 சதவீதம் தொழில் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

Story image

தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புறங்களில் வசிக்கும் அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது. அரக்கோணத்தில் பாதாளச் சாக்கடை திட்டப் பணி முடிந்துள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி தந்தது தமிழக அரசு. இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்திய அரசு தமிழக அரசு.

Story image

திமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட மக்களுக்கு வழங்கவில்லை. ஏழை மக்கள் திராவிட ஆட்சிக் காலத்தில் எந்த நலனும் பெறவில்லை. 70 வயது முடிந்த பின்னர் மக்கள் மீது அக்கறை கொள்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். 

பெட்டி வைத்து குறைகள் கேட்பவர் ஸ்டாலின். 100 ஆண்டுகள் அதிமுக அரசு தான் நிலைக்கும். எனவே, திமுக தலைவர் ஸ்டாலின் பெட்டி வைத்து குறைகளைக் கேட்பது வேடிக்கையாக உள்ளது. 

Story image

52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 26 அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. 2010 ஆண்டில் திமுக காங்கிரஸ் தலைமையில் தான் நீட் தேர்வு கொண்டு வந்தார்கள்.

இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், அனைத்து துறைகளிலும் தமிழகம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது என்று அவர் பேசியுள்ளார். 

நிகழ்ச்சி முடிந்து முதல்வர் பழனிசாமி வேலூர் புறப்பட்டுச் சென்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.