இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஓமலூர்: அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் சோதனை

முதல்வர் பழனிசாமி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் சோதனை  மேற்கொண்டனர்.

News image
ஓமலூர்: அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் சோதனை
Updated On :10 பிப்ரவரி 2021, 12:32 pm

DIN

ஓமலூர்: முதல்வர் பழனிசாமி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் சோதனை  மேற்கொண்டனர்.

சேலத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை 100 என்ற எண்ணிற்கு மிரட்டல் வந்தது. 

இதனையடுத்து சென்னையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திலும், சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சென்று சோதனை செய்து பார்த்தனர். மோப்ப நாய் ஜெனி வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. ஆனால் வெடிபொருள்  ஏதும் சிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழக முதல்வர், திருப்புத்தூரில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை  சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

இன்று காலை முதலமைச்சரின் இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் வந்ததை அடுத்து, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கட்சி அலுவலகம் வந்த அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கர் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.