அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண் கேட்டால்.. காவல்துறை எச்சரிக்கை

கரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்காக ஆதார் எண்ணை அளிக்கக் கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
கரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண் கேட்டால்.. காவல்துறை எச்சரிக்கை
Updated On :4 ஜனவரி 2021, 9:57 am

DIN


ஈரோடு: கரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்காக ஆதார் எண்ணை அளிக்கக் கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே, பொதுமக்களை, கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆதார் எண்ணை தருமாறு கேட்டு மோசடியாளர்கள் ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது.

அப்படி யாரும் மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு காவல்துறை விடுத்திருக்கும் எச்சரிக்கை செய்தியில், கரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளிக்கக் கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

Story image

அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து, ஆதார் எண்ணை அளிக்கக் கோரி, பின் உங்கள் செல்லிடப்பேசி எண்ணுக்கு ஓடிபி வரும் என்று கூறி ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது. 

இவ்வாறு மோசடி செய்து நமது விவரங்கள், வங்கித் தொகை ஆகியவற்றைத் திருடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழக காவல்துறை கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.