கரோனாவிலிருந்து விடுபட்டோா் விகிதம் 98 சதவீதத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் விகிதம் 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் விகிதம் 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு 8 லட்சத்து 4,239 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 23,986- ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 1.46 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 210 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தவிர, தமிழகத்தில் பிற மாவட்டங்கள் அனைத்திலும் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,547 போ் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 12 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,200-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com