இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வைகை அணையிலிருந்து 58-ம் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி, நிலக்கோட்டை பகுதிகளின் பாசனத்திற்கு சனிக்கிழமை 58-ம் கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

News image
வைகை அணையிலிருந்து 58-ம் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Updated On :16 ஜனவரி 2021, 11:20 am

DIN

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி, நிலக்கோட்டை பகுதிகளின் பாசனத்திற்கு சனிக்கிழமை 58-ம் கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

வைகை அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை இரவு 68.50 அடியை எட்டியதால், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் சனிக்கிழமை அதிகாலை 3-ம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வழக்கமாக அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததும், அணையிலிருந்து உபரி நீர் வைகை ஆற்றில் திறக்கப்படும். ஆனால், தற்போது அணையிலிருந்து உபரியாக வரும் தண்ணீரை வெளியேற்றாமல், அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்க பொதுப் பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம் ஆகியவற்றில் உள்ள 2,285 ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக 58-ம் கால்வாயில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கம்பம் எஸ்.டி.கே.ஜக்கையன், உசிலம்பட்டி நீதிபதி, பெரியாறு - வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்பு  பொறியாளர் எம்.சுகுமார், வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.