இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீ மகாமாரி  நாக அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு

ஸ்ரீ மகாமாரி  நாக அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

News image
ஸ்ரீ மகாமாரி நாக அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு பக்தர்கள்.
Updated On :24 ஜனவரி 2021, 9:54 am

DIN



ஸ்ரீ மகாமாரி  நாக அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருக்குவளை-கொளப்பாடு பிரதான சாலையில் காருகுடி கிராமத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகாமாரி  நாக அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் காணும்  பொங்கல் அன்று பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நிகழாண்டு பருவம் மாறி பெய்த தொடர் மழையால் காணும் பொங்கல் அன்று நடைபெற இருந்த பொங்கல்  வைத்து வழிபடும் நிகழாவானது ஞாயிற்றுக்கிழமை(ஜன.24) நடைபெற்றது.

சுமார் 50 பக்தர்கள் மண்பானையில் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.

முன்னதாக அம்மனுக்கு பால்,பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு பின்னர் மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு வருட காணும் பொங்கலின் பொழுதும் இக்கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டு பொங்கல் வைத்து வழிபடுவோரின் வேண்டுதல் ‌ அடுத்த ஆண்டு காணும் பொங்கல் வருவதற்குள் நிறைவேறி விடுவதாக பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தடை,குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும் ,பில்லி சூனியம் நீக்குதல் மற்றும் ராகு கேது பரிகார ஸ்தலமாகவும்  விளங்குகிறது. அரசமரமும் வேப்பமரமும் ஒன்றிணைந்து கோவில் வளாகத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.