இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சொட்டு மருந்து போடும் குழந்தைகளுக்கு பரிசு: கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரின் வினோத அறிவிப்பு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணன்கோட்டை ஊராட்சியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினத்தையொட்டி போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும் குழந்தைகளுக்கு பரிசு

News image
சொட்டு மருந்து போட்டுக் கொண்ட ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பரிசு பொருட்களை வழங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி.
Updated On :31 ஜனவரி 2021, 9:31 am

DIN

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணன்கோட்டை ஊராட்சியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினத்தையொட்டி போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தசாமி அறிவித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குழந்தைகள் ஒருவர் விடாமல் வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொண்டு பரிசை பெற்றுக் கொண்ட  சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணன்கோட்டை ஊராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் உத்தரவின்பேரில் கண்ணன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வை ஒட்டி போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு ஊராட்சி மன்றத்தின் சார்பாக பரிசளிக்கப்படும் என்று ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தசாமி அறிவித்திருந்தார். இதனை அறிந்த கண்ணன் கோட்டை பகுதி மக்கள் அவரவர் வீடுகளிலிருந்து குழந்தைகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து சொட்டு மருந்து போட்டுக் கொண்ட ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பரிசு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமியின் இந்த செயலை சுகாதாரத்துறையினர் மட்டுமல்லாது, பொதுமக்களும் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மக்களும் பெரிதும் பாராட்டினார்.

நிகழ்வில் ஊராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.