விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜூலை 26 முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

News image

அமைச்சர் க.பொன்முடி

Updated On :19 ஜூலை 2021, 6:50 am

DIN

தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான முடிவுகளை இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதையடுத்து கல்லூரி சேர்க்கை குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அமைச்சர் பொன்முடி பேசியதாவது,

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புவர்கள் வருகின்ற 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான பிளஸ் 2 முடிவுகளும் வெளியான பிறகு தான் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.