தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக ஆளுநரால், வெ.பழனிக்குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அப்பதவியில் பொறுப்பேற்கும் நாளிலிருயது இரண்டாண்டு காலம் அப்பதவியினை வகிப்பார். அவ்வாறே அவ்வாணை தமிழ்நாடு சிறப்பு அரசிதழில்
இன்று (29.05.2021) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.