அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 8:39 am

DIN

தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கி.மு.8 ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த துறைமுகமாக கொற்கை இருந்துள்ளது. 

பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவு வந்துள்ளது. கங்கைச் சமவெளி நாகரிகத்திற்கும் வைகைச் சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மௌரியப் பேரரசு காலத்திற்கு முந்தைய காசு கீழடியில் கிடைத்துள்ளது. 

கீழடி நாகரிகம் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற, தொழில் சமூகமாக இருந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் பெயர் பல்வேறு காலகட்டங்களில் பொருநை ஆறு என அழைக்கப்பட்டு வந்துள்ளது. 

பொருநை ஆற்றங்கரை நாகரிகம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் செழித்தோங்கியுள்ளது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.