கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில அதிகாரத்தில் இருந்த கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரி திமுக எம்.எல்.ஏ. எழிலன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
முறையான சட்டவிதிகளை இயற்றாமல் அவசரகாலத்தில் சட்டம் இயற்றப்பட்டது என்றும், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலில் மாற்றியது அரசியல் அமைப்புக்கு எதிரானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது எனக் குறிப்பிட்டு மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டது.