தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் யார்? முதல்வர் ஆலோசனை

தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்களை நியமிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்களை நியமிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை பெருநகர காவல் ஆணையரகம் மூன்றாக பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடிக்கு தனி காவல் ஆணையரகம் உருவாக்கப்படும் என சமீபத்தில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தை மூன்றாக பிரிப்பது குறித்தும், தாம்பரம் மற்றும் ஆவடிக்கு புதிய ஆணையரை நியமிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு, உளவுத்துறையின் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com