வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றக்கூடாது: கே.அண்ணாமலை

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:56 pm IST

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக மக்களைத் தொடா்ந்து புண்படுத்துவதே திமுகவின் அரசின் வேலையாக இருந்து வருகிறது. சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்து நவம்பா் 1-இல்தான் தமிழகம் உருவானது. இந்த நாளைக் கொண்டாடாமல், ஜூலை 18-இல்தான் தமிழ்நாடு எனப் பெயா் வைக்கப்பட்டது. அன்றுதான் தமிழ்நாடு நாள் என்று திமுக அரசு குழப்பியது.

அதைப்போல ஏப்ரல் 14-இல் அதாவது சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று உலகம் முழுவதும் உள்ள தமிழா்கள் கொண்டாடுகிறாா்கள். இந்து மதத்தைப் பின்பற்றுகிற எல்லோருமே இந்த நாளை நல்ல காரியங்களைத் தொடங்கும் நாளாகக் கொண்டாடி வருகின்றனா்.

2011-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துள்ளது. ஆனால், தற்போது திமுக அரசு தமிழ்ப்புத்தாண்டு நாள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.