இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை: புதிய டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

News image
குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை: புதிய டிஜிபி சைலேந்திரபாபு
Updated On :30 ஜூன் 2021, 7:29 am

DIN


சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக சி. சைலேந்திரபாபு இன்று பதவியேற்றுக் கொண்டார்.  

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட சைலேந்திர பாபுவிடம் முறைப்படி அவர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

Story image

பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் டிஜிபி அலுவலகத்தில், தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக புதிதாக பதவியேற்றிருக்கும் சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிப்பது என்பது அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம் -  ஒழுங்கை பேணிக்காக்க முன்னுரிமை வழங்கப்படும்.

மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், காவல்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் சைலேந்திரபாபு கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.