
ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா
சென்னை: தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி இன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரிவு டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக் காலம், ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புதிதாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திர பாபுவிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி. மேலும், சைலேந்திர பாபுவுக்கு திரிபாதி பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிக்கலாமே.. நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறை
பிறகு, ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி மற்றும் அவரது மனைவியை காரில் அமரவைத்து, காவல்துறை அதிகாரிகள் காரை தேர் போல கயிறு கட்டி இழுத்து, காருக்கு முன்பாக மலர்களைத் தூவி, பாரம்பரிய முறைப்படி வழியனுப்பி வைத்தனர்.