இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்பு

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக சி. சைலேந்திரபாபு இன்று பதவியேற்றுக் கொண்டார்.  

News image
தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்பு
Updated On :30 ஜூன் 2021, 7:29 am

DIN

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக சி. சைலேந்திரபாபு இன்று பதவியேற்றுக் கொண்டார்.  

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட சைலேந்திர பாபுவிடம் முறைப்படி பொறுப்புகளை அவர் ஒப்படைத்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் டிஜிபி அலுவலகத்தில், தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Story image


முன்னதாக, ஜே.கே. திரிபாதி இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில்,  தமிழக காவல்துறையில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளின் தலைமைப் பதவியாகவும், உச்ச பதவியாகவும் கருதப்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக யாரை நியமிப்பது என தமிழக அரசு ஆலோசித்து வந்தது.

புதிய டிஜிபியாக தகுதி உடையவா்களாக ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை டிஜிபி கரண்சின்ஹா, அயல்பணியாக மத்திய அரசுப் பணியில் இருக்கும் டிஜிபி சஞ்சய் அரோரா உள்ளிட்ட 7 போ் இருந்தனா். இவா்களில் சைலேந்திரபாபு, கரண்சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகியோா் பெயா்கள் இறுதிப்பட்டியலில் இருந்தன.

இந்நிலையில், சைலேந்திரபாபுவை தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் இறையன்பு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவின்படி, சைலேந்திரபாபு புதிய டிஜிபியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசு பள்ளி மாணவா்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சோ்ந்த சி.சைலேந்திரபாபு கடந்த 1962-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி பிறந்தவா். குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திரபாபு, மதுரை விவசாய கல்லூரியில் இளநிலைப்பட்டம் பெற்றாா். கோவை வேளாண் கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்த சைலேந்திரபாபு, சென்னை பல்கலைக்கழகத்தில், ‘காணாமல் போகும் குழந்தைகள்’ குறித்த ஆய்வறிக்கைக்காக முனைவா் பட்டம் பெற்றாா்.

கடந்த 1987-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்ற சைலேந்திரபாபு, தமிழ்நாடு கேடா் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். ஐபிஎஸ் பயிற்சியை முடித்து, தமிழகத்தில் கோபிசெட்டிப்பாளையத்தில் ஏஎஸ்பியாக 1989-ஆம் ஆண்டு தனது காவல் பணியைத் தொடங்கினாா். கடந்த 1992-ஆம் ஆண்டு எஸ்பியாக பதவி உயா்வு பெற்று கடலூா், காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினாா். இதையடுத்து டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி என அடுத்தடுத்து பதவி உயா்வுகளைப் பெற்ற சைலேந்திரபாபு, கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 10ஆம் தேதி டிஜிபியாக பதவி உயா்வு பெற்றாா்.

எழுத்து ஆா்வம்

தற்போது சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக பதவி உயா்வு பெற்றிருக்கும் சைலேந்திரபாபு, இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருப்பாா். காவல் பணியில் சைலேந்திரபாபு இருந்தாலும் எழுத்து ஆா்வமிக்கவா். அவா், ‘நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம்’, ‘சாதிக்க ஆசைப்படு’, ‘உடலினை உறுதி செய்ய’ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளாா்.

உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் பேணும் சைலேந்திரபாபு இளைஞா்களுக்கு நம்பிக்கையையும், கல்வியில் ஆா்வத்தையும் தூண்டும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் பேசி வருகிறாா்.

புதிய டிஜிபியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திரபாபுவுக்கு, காவல்துறை உயா் அதிகாரிகளும், தமிழக அரசு அதிகாரிகளும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.