இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

உத்தரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு

1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூத்ததேவி சிலை ஒன்றை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மைய்யத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

உள்ளம்பாக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை

Published On :28 ஜனவரி 2024, 1:45 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள உள்ளம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூத்ததேவி சிலை ஒன்றை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மைய்யத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே வயலூர் கூட்டுச் சாலை பகுதியில் உள்ளது உள்ளம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தின் இருளர் குடியிருப்பு பகுதியில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூதேவி எனப்படும் ஜேஷ்டா தேவி சிலை ஒன்றை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கூறியது..

எங்களது கள ஆய்வில் கிடைத்த இச்சிலையானது ஒன்றரை அடி உயரமே வெளியில் தெரியும் வகையில் இருக்கிறது. எஞ்சிய பகுதி பூமிக்கடியில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த ஜேஷ்டாதேவி சிலையாகும். இச்சிலையின் வலப்பக்கத்தில் மாட்டுத்தலை போன்ற வடிவில் அவரது மகன் மாந்தனும், இடப்பக்கம் மகள் மாந்தியும் காணப்படுகின்றனர்.

தலைக்கு மேலே காக்கை சின்னம் உள்ளது. இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களிலும், திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும்புலவர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளார். நந்தி வர்ம பல்லவனின் குலதெய்வமாகவும் இருந்துள்ளார். இத்தெய்வம் வளமையின் அடையாளமாகவும் இருந்திருக்கிறது. இதை அப்பகுதி மக்கள் எல்லைக்காத்தாள் என்கிறார்கள்.

இச்சிலையின் கழுத்தில் கரண்ட மகுடத்துடனும், கழுத்தில் அணிகலன்களோடும், தோள்பட்டையில் வளையல்களோடும்,கைகளில் காப்பும் காணப்படுகிறது. மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயிருக்கிறது. பழமையான இச்சிலை குறித்து தொல்லியல் துறையினர் உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக உள்ளது எனவும் கொற்றவை ஆதன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.