திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சாத்தான்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் குருத்தோலை பவனி கொண்டாடப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2022, 12:47 pm IST



சாத்தான்குளம்: சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் குருத்தோலை பவனி கொண்டாடப்பட்டது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட முந்திய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், சாத்தான்குளம் தூய ஸ்தேவான் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. ஆலயம் முன்பு இருந்து தொடங்கிய பவனியை சேகர குருவானவர் செல்வன் மகாராஜா தொடங்கி வைத்தார்.

பவனி ஆனது ஆலய முன்பிருந்து தொடங்கி ஜெபஞானபுரம், தட்ச மொழி மாணிக்கவாசகம், ஆசிர்வாதபுரம் வழியாக பெருமாள் சாமி கோயில் தெருவில் வந்து மீண்டும் தேவாலயம் முன்பு நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மக்கள் கையில் குருத்தோலையை கையேந்தி ஓசன்னா பாடலை பாடி ஊர்வலமாக வந்தனர். 

இதைத் தொடர்ந்து சேகர குருவானவர் செல்வன் மகராஜா தலைமையில் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது இதில் சபை மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.