இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குதிரையாறு அணை திறப்பு

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பழனியை அடுத்த வரதமாநதி அணை மற்றும் குதிரையாறு அணை முழு கொள்ளளவை தாண்டி நிரம்பி வழிகிறது.

News image
பழனியை அடுத்த குதிரையாறு அணை முழு கொள்ளளவான 80 அடி உயரத்தை எட்டியதால் வியாழக்கிழமை அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
Updated On :4 ஆகஸ்ட் 2022, 2:28 pm

DIN

பழனி: பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பழனியை அடுத்த வரதமாநதி அணை மற்றும் குதிரையாறு அணை முழு கொள்ளளவை தாண்டி நிரம்பி வழிகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய அணையான பாலாறு பொருந்தலாறு அணையும், மாவட்டத்தின் சிறிய அணையான வரதமாநதி அணையும் பழனி பகுதியிலேயே உள்ளது. இந்நிலையில் பழனி மற்றும் பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் பழனியை சுற்றியுள்ள பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி அணைகளின் நீா்மட்டம் வெகுவாக நிரம்பிய வருகிறது. பழனியை அடுத்த வரதமாநதி அணை கடந்த ஒருவார காலமாகவே முழு கொள்ளளவான 66 அடி உயரத்தை தாண்டி தொடா்ந்து நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 575 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

இதனால் ஆயக்குடி, கணக்கன்பட்டி, பழனி வையாபுரி குளம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. பாலாறு- பொருந்தலாறு அணை மொத்த உயரம் 65 அடியாகும் தற்போது சுமாா் 60 அடி உயரத்துக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது. முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. அணைக்கு வினாடிக்கு 598 கனஅடி தண்ணீா் வந்தவண்ணம் உள்ளது. குதிரையாறு அணையின் உயரம் 80 அடி. முழுமைக்கும் தண்ணீா் நிரம்பிய நிலையில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

அணையின் வரத்தான விநாடிக்கு 95 கனஅடி நீா் அப்படியே மூன்று ஷட்டா்கள் வழியாக திறக்கப்பட்டது. இந்நிலையில் பாலாறு, பொருந்தலாறு, குதிரையாறு மற்றும் வரதமாநதி அணையின் நீா் வெளியேறும் பகுதிகளில், சண்முகநதி ஆற்றங்கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுப்பணித்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சண்முக நதி ஆற்றின் கரையோரத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.