திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மானாமதுரை மாரியம்மன் கோயிலில் பொங்கல், பூச்சொரிதல் விழா 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பொங்கல், பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
மானாமதுரை கன்னார்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
Updated On :26 ஆகஸ்ட் 2022, 7:12 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பொங்கல், பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வீர சைவ சமூகத்தினர் சார்பில் நடைபெறும் இவ் விழாவை முன்னிட்டு கனீனார்தெரு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டி விரதம் தொடங்கினர். காப்பு கட்டிய நாள் முதல் தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பால்குடம் உற்சவத்தை முன்னிட்டு காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து கரகம், தீச்சட்டிகள், பால்குடங்கள் சுமந்து மேளதாளத்துடன் வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக கன்னார்தொரு மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். 

Story image

கன்னார்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து கரகம், தீச்சட்டிகள், பால்குடங்கள் சுமந்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

அதன்பின்னர் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை வீர சைவ சமூகத்தினர் செய்திருந்தனர். 

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக பூத்தட்டு ஊர்வலம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.