எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மானாமதுரை மாரியம்மன் கோயிலில் பொங்கல், பூச்சொரிதல் விழா 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பொங்கல், பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
மானாமதுரை கன்னார்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
Updated On :26 ஆகஸ்ட் 2022, 7:12 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பொங்கல், பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வீர சைவ சமூகத்தினர் சார்பில் நடைபெறும் இவ் விழாவை முன்னிட்டு கனீனார்தெரு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டி விரதம் தொடங்கினர். காப்பு கட்டிய நாள் முதல் தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பால்குடம் உற்சவத்தை முன்னிட்டு காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து கரகம், தீச்சட்டிகள், பால்குடங்கள் சுமந்து மேளதாளத்துடன் வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக கன்னார்தொரு மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். 

Story image

கன்னார்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து கரகம், தீச்சட்டிகள், பால்குடங்கள் சுமந்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

அதன்பின்னர் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை வீர சைவ சமூகத்தினர் செய்திருந்தனர். 

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக பூத்தட்டு ஊர்வலம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.