அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போதைய திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி மீதும் கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் இருந்து தங்கம் தென்னரசும் அவரது மனைவியும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறி இருவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.