குஜராத் முதல்வராக பதவியேற்ற பூபேந்திர படேல் காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய இத்தோ்தலில், 156 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
தொடா்ந்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக பூபேந்திர படேல் (60) மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
குஜராத் மாநில முதல்வராக தொடா்ந்து 2-ஆவது முறையாக பூபேந்திர படேல் நேற்று(திங்கள்கிழமை) பதவியேற்றாா். அவருடன், 16 அமைச்சா்களும் பதவியேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், கட்சியின் மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குஜராத் முதல்வராக பதவியேற்ற பூபேந்திர படேல் காந்தி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பாஜகவினர் மற்றும் அதிகாரிகள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு: பிரதமா் மோடி பங்கேற்பு